கண்ணாடித் திரைகளையும்
காகிதச் சுவர்களையும் தாண்டி
வெட்ட வெளியில்
தனிப்பாடலாய் மலர்கிறது
தனிப்பெரும் சூரியன்.
வெள்ளம் வடிந்த
நிலத்தின் ரேகையெனப் படிந்தன
வைகறையின் நிறப்புனைவுகள்.
மௌனத்தில் பதிவான ஓசைகள்
பறவை மொழியில்
இசைப்பாடலாய்
இடம் பெயர
பகலின்
முரட்டு வழித்தடத்தைப்
பட்டாம்பூச்சிகள்
மிருதுவாக்கின.
நாமோ
வெறுமனே
ஜன்னலைத் திறக்கிறோம்
ஆகாயத்தைச் சதுரங்களாய்
நறுக்கியவாறு
தீமிதித்தல் போலும்
தினசரிகள் மேய்ந்து
கோப்பைத் தேநீராகப்
பழுப்பேறிய தினங்களைப்
பருகி முடிக்கிறோம்.
ஒரு வாய்ப்பாடாக
உச்சரித்துத் தீர்த்த பொழுதின்
அற்றை இரவின்
ஒற்றை நிலவும்
மொட்டை மாடியின்
மெல்லிய காற்றும்
பேசவந்து
பேச்சற்றுத் திகைக்கும்
அப்போது நாம்
கதவுகளை
காகிதச் சுவர்களையும் தாண்டி
வெட்ட வெளியில்
தனிப்பாடலாய் மலர்கிறது
தனிப்பெரும் சூரியன்.
வெள்ளம் வடிந்த
நிலத்தின் ரேகையெனப் படிந்தன
வைகறையின் நிறப்புனைவுகள்.
மௌனத்தில் பதிவான ஓசைகள்
பறவை மொழியில்
இசைப்பாடலாய்
இடம் பெயர
பகலின்
முரட்டு வழித்தடத்தைப்
பட்டாம்பூச்சிகள்
மிருதுவாக்கின.
நாமோ
வெறுமனே
ஜன்னலைத் திறக்கிறோம்
ஆகாயத்தைச் சதுரங்களாய்
நறுக்கியவாறு
தீமிதித்தல் போலும்
தினசரிகள் மேய்ந்து
கோப்பைத் தேநீராகப்
பழுப்பேறிய தினங்களைப்
பருகி முடிக்கிறோம்.
ஒரு வாய்ப்பாடாக
உச்சரித்துத் தீர்த்த பொழுதின்
அற்றை இரவின்
ஒற்றை நிலவும்
மொட்டை மாடியின்
மெல்லிய காற்றும்
பேசவந்து
பேச்சற்றுத் திகைக்கும்
அப்போது நாம்
கதவுகளை
*********
மௌனத்தில் பதிவான ஓசை
( தந்தையர் நாள் வாழ்த்துக்
கவிதை)
-------------------------------------------------------------------
பெரிது பெரிது
வானம் பெரிது
வானமோ பூமிமேல்
விரித்த போர்வை
பூமியோ மண்துகள்
பரப்பின் சேர்க்கை
மண்ணோ கல்லின்
மூலக் கூறு
கல்லோ நதிகள்
கொணர்ந்த பேறு
நதிகளோ கடலிடை
நீண்டு கலப்பவை
கடலோ புவியினும்
காணப் பெரிது
கடலினும் தந்தையர்
தியாகம் பெரிதே.
-----முரளிஅரூபன்
20--06--2021
0 கருத்துகள்:
கருத்துரையிடுக